Friday, September 3, 2010

சுஜாதா மகேந்திரராஜா

சதுரங்கக் குதிரை சதிராட்டமாட
மந்திரிமாரோ மானோட்டமோட
யானைகள் நன்கு யதார்த்தமாய் அசைய
ராணிதான் அங்கே ராஜாவை ஆள
ராஜாவோ அதிலே ராச்சியமாள
சிப்பாய்கள் சூழ சிங்காரம் செய்ய
சதுரங்கப்பலகை சங்கீதம் பாடும்
சந்தர்ப்பம் சில கணம் சங்காரம் ஆகும்
அருகினில் கடிகாரம் அமைதியைக் கொல்லும்
வெற்றிகள் தோல்விகள் போட்டியின் ஜாலம்

No comments:

Post a Comment